அக்கரைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைவு!

11_Fotor
ஆரீப் இஸ்மாயில்
அக்கரைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் உதவித்தவிசாளர் ஐ.எல்.ஏ.ஹக்கீம் உள்ளிட்ட குழுவினர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டனா்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அக்கரைப்பற்று தேர்தல் காரியாலயம் நேற்று இரவு வேட்பாளர் கணக்காளரும் தொழிலதிபருமான எம்.என்.எம்.நபீல் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
இதன் போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் முன்னிலையில் உதவித்தவிசாளர் உள்ளிட்டோர் கட்சியில் இணைந்து கொண்டனா்.
இதன் போது முன்னாள் உதவித்தவிசாளா் ஹக்கீம் கருத்து தெரிவிக்கையில், 
அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்காக உழைப்பதுடன் எங்களது அக்கரைப்பற்று வேட்பாளர் எம்.என்.எம்.நபீலின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக தானும் தனது ஆதரவாளா்களும் இணைந்து செயற்படவுள்ளதாக உதவித்தவிசாளா் தெரிவித்தார்.
முன்னாள் உதவித்தவிசாளர் ஹக்கீம் தேசிய காங்கிரஸ் கட்சி சார்பாக பிரதேச சபைத்தேர்தலில் போட்டியிட்டு தெரிவு செய்யப்பட்டவர்.
இந்நிகழ்வில் முன்னாள் பிரதி அமைச்சர் அட்மிரல் சரத்வீரசேகரவின் அக்கரைப்பற்று இணைப்பாளர் ஐ.எல்.பாறுாக்(றினோஸ்) உட்பட வர்த்தகப்பிரதிநிதிகள்,இளைஞர்கள் எனப்பலர்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டனர்.
10_Fotor 13_Fotor