ஈத் பெருநாளை முன்னிட்டு இங்கிலாந்து வாழ் இலங்கை சிறார்களின் விளையாட்டு நிகழ்வு !

IMG_1392_Fotor_Fotor

ஜமால்டீன் ஹுசைன் 

புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு இங்கிலாந்தின் Hemel Hempstead இல் வாழும் இலங்கைச் சிறார்களின் விளையாட்டு நிகழ்வுகள் நேற்று இடம்பெற்றது .

இதில் சிறுவர்களுக்கான பலூன் ஊதுதல் ,யானைக்கு கண் வைத்தல் , பனிஸ் உண்ணுதல் , சங்கீதக் கதிரை , யோகட் உண்ணுதல் , முட்டை எறிதல் உட்பட மற்றும் பல வகையான விளையாட்டு நிகழ்வுகள் இடம் பெற்றன .

IMG_1396_Fotor_Fotor

இந் நிகழ்ச்சிக்கு SLMMA ஹெமலின் தலைவர் அல் ஹாஜ் அப்துல் நிலாம்  தலைமை தாங்கியதுடன் SLMMA ஹெமலின் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர் ஜமால்டீன் ஹுசைன் இந் நிகழ்வுகளை நெறிப்படுத்தினார்.

 இந் நிகழ்வுகளில் வெற்றி பெற்ற சிறார்களுக்கு SLMMA ஹெமலின் தலைவர் அல் ஹாஜ் அப்துல் நிலாம்  பரிசில்களை வழங்கி வைத்தார் . இதில் பெற்றோர்களும் கலந்து கொண்டனர் .

IMG_1397_Fotor

IMG_1390_Fotor_Fotor IMG_1391_Fotor_Fotor