மஹிந்தவுக்கு ஆதரவு வழங்கமாட்டேன்: ஜனாதிபதி உறுதியாக தெரிவிப்பு !

 

Mahinda-Maithri-1

 எதிர்வரும் பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கமாட்டேன் என ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன  தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிட அனுமதியளித்தது ஏன் என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கை அரசியல் வரலாற்றில் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த ஒருவர் மீண்டும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றமைக்கு எக்காரணம் கொண்டும் ஆதரவு வழங்க மாட்டேன் என ஜனாதிபதி உறுதிப்பட தெரிவித்தார்.

மேலும் மஹிந்த ராஜபக்ஷ கடந்த தேர்தலில் தனக்கு எதிராக பல தேர்தல் கூட்டங்களை நடத்தியிருந்தார். ஆனால் நான் அமைதியாக இருந்தேன் எனவும் குறிப்பிட்டார்.