அகலக் கால் பதிக்கிறார் அமைச்சர் றிசாத் !

Minister_Rishad_3_0

அஷ்ரப் ஏ சமத் 

அம்பாறை- வன்னி வோட்பாளர்கள் விபரம்

வன்னி மாவட்டத்தில் ஜ.தே.கட்சிப் பட்டியலில் யானைச் சின்னத்தில் முதன்மை வேட்பாளராக அ.இ.மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுத்தீன் தலைமையில் 9 பேர் கொண்ட குழு தேர்தலில் குதிக்கின்றனர் .

இந்த வேட்பாளார் பட்டியலில் அ.இ.ம.காங்கிரஸ் முத்த உறுப்பினரும், முசலிப் பிரதேசத்தின் முன்னாள் தலைவருமான டபிய்யு. என் எஹியாக்கான் அத்துடன் சிங்கள சமுகத்தில் 2 வேட்பாளார் தமிழ் சமுகத்தில் இருந்து 5 வேட்பாளர்கள் இந்தப் பட்டியலில் போட்டியிடுகின்றனர் .

இதே வேளை அ.இ.மக்கள் காங்கிரசின் ஜ. தே.கட்சியின் ஆணைச் சின்னத்தில் புத்தளத்தில் முன்னாள் மாகண அமைச்சர் நவவி, அநுராதபுரத்தில் பிரபல சமுக சேவையாளரும் வர் த்தகருமான இஷாக் ஹாஜி, போட்டியிடுகின்றனர் .

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்மை வேட்பளாளர் பிரதியமைச்சர் எம். எஸ்.எஸ் அமீர் அலி, தலைமையிலான குழு களமிறங்கியுள்ளனர் .

இதே வேலை திருமலை, குருநாகல் ஆகிய மாவட்டங்களிலும் அ.இ.ம.காங்கிரஸ் ஜ.தே.கட்சியில் பட்டியலில் தமது வேட்பாளர்களை களத்தில் இறக்கியுள்ளது.

அத்துடன் ஸ்ரீ.ல.மு.காங்கிரசின் கோட்டையான அம்பாறை மாவட்டததில் அ.இ.ம.காங்கிரசின் முதன் முறையாக மயில் சின்னத்தில் தேர்தலில் தனித்து தமது கட்சி வேட்பாளர்களை நிறுத்தியுள்ளமை அரசியல் அரங்கில் பரபரப்பாகப் பேசப்படுகின்றது.

முதன்மை வேட்பாளராக முன்னாள் எம்.பியும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருமான பொத்துவில் அப்துல் மஜீத் களம் இறங்கியுள்ளார் . அவரது தலைமையில் – கல்முனை முன்னாள் மேயர் சிறாஸ் மிராசாஹிப், தென்கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் கலாநிதி இஸ்மாயில், கணனி பொறியியலாளார் அன்வர் முஸ்தபா, தொழில் அதிபர் நபீல், தொழிலதிபார் நதீர் வெஸ்டர் றியாஸ் உட்பட 10 பேர் தேர்தலில் குதிக்கின்றனர் .