பிலிப்பைன்ஸில் பைக்குள் குழந்தை: ஸ்கேனில் சிக்கிய தாய் !

 fdf

 பப்புவா நியூ கினியாவைச் சேர்ந்த ஜெனிபர் பவலொரியா (25), நர் நியூகினி விமானம் மூலம் பிலிப்பைன்ஸ் சென்றார்.

இதன்போது, பிலிப்பைன்ஸில் நினாய் அகியுனோ விமான நிலையத்தில் அவரது உடைமைகளைக் குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது அவர் கொண்டுவந்த பையை எக்ஸ்ரே இயந்திரம் மூலம் சோதனை செய்தபோது அதற்குள் குழந்தை மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

உடனடியாக அதிகாரிகள் பைக்குள் இருந்த குழந்தையை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பினர்.

விசாரணையில் ஜெனிபரின் குழந்தைக்கு குடியேற்ற அனுமதி கிடைக்கவில்லை என்பதால் அவர் தனது பைக்குள் குழந்தையை மறைத்து வைத்து எடுத்துச் சென்றது தெரியவந்தது.

 

26C4078E00000578-3000298-image-a-10_142667722632326C4079300000578-3000298-image-a-9_1426677206687