ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர்களை தெரிவு செய்யும் நேர்முகத் தேர்வுகள் நிறைவு !

 z_p-13-Met-Department

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்பாளர்களை தெரிவு செய்யும் நேர்முகத் தேர்வுகள் நிறைவுபெற்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதற்கமைய வேட்புமனு தயாரிப்பதற்கான பட்டியல்களை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கை தற்போது இடம்பெற்று வருவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர கூறியுள்ளார்.

அதிகளவிலானவர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடுவதற்கு விண்ணப்பித்துள்ளதாக இந்த பணிகள் சற்று தாமதமடைந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் மீண்டும் வேட்புமனு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர கூறியுள்ளார்.

குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகாதவர்கள் தொடர்பில் இதன்போது கூடுதல் கவனம் செலுத்தப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.