சித்திரை விளையாட்டு விழா

(எம்.எம்.ஜபீர்)
  சித்திரை புத்தாண்டை முன்னிட்டு அன்னமலை சக்தி இளைஞர் கழகம் ஏற்பாடு செய்த விளையாட்டு விழா நேற்று(16)  வியாழக்கிழமை சக்தி இளைஞர் கழகம் தலைவர் சு.பார்தீபன் தலைமையில் சக்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
  இந்நிகழ்வுக்கு நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.கரன், அம்பாரை மாவட்ட இளைஞர் சேவைகள் அதிகாரி ஏ.எச்.யூ.உமர்லெவ்வை, நாவிதன்வெளி பிரதேச செயலக இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் நாவிதன்வெளி இளைஞர் சம்பளனத்தின் தலைவருமான டி.சுதன், முன்னால் கோட்டக் கல்வி பணிப்பாளரும் ஸ்ரீ வடபத்திர காளியம்மன் ஆலய தலைவர் பொன் செல்வநாயகம், நாவிதன்வெளி பிரதேச செயலக சமூர்த்தி தலைமைப் பீட முகாமையாளர் வீ.சிறிநாதன், பீ.சீ.ஏ.நிறுவனத்தின் முகாமையாளர் சீ.நந்தக்குமார், நாவிதன்வெளி பிரதேச செயலக இளைஞர் சேவை அதிகாரி என்.ஜெயராஜ், அன்னமலை சக்தி வித்தியாலய அதிபர் ஈ.தயாசிறி, அன்னமலை கிராம சேவக உத்தியோகத்தர் ஏ.இருதயநாதன், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கே.புஸ்பவதி, சிவாகலா ரூபன், அன்னமலை கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் வீ.ஜெகநாயகம், அன்னமலை ஆலயங்களின் பூசகர்கள் விஸ்வ பிரம்ம ஸ்ரீ கோணமலை பூசகர், விஸ்வ பிரம்ம ஸ்ரீ சிவராசா பூசகர், இளைஞர்கள்,யுவேதிகள்,பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
  இதனபோது மென்பந்து கிறிக்கட் சுற்றுபோட்டி, வழுக்கு மரம் ஏறுதல், முட்டி உடைத்தல், தலையணைச் சமர், கயிறு இலுத்தல், சாக்கோட்டம், பலூன் உடைத்தல், மிட்டாய் புறக்குதல், மாவூதி நாணயம் எடுத்தல் இன்னும் பல பல வினிநோத விளையாட்டுக்களும் இடம்பெற்றது.
இதவேளை போட்களில் கலந்துகொண்டு வெற்றிபெற்றோருக்கு பெறுமதிமிக்க பரிசிப்பொதிகளும் கலந்துகொண்ட அதிதிகளினால் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
05 (1)_Fotor
04_Fotor03 (1)_Fotor
07_Fotor