” மகிந்தவை வீட்டுக்கு அனுப்பிவிட்டு நாம் இன்று பேராபத்தில் விழுந்து விட்டோம்” என்று சொல்லும் நண்பர் ரவுப் ஹக்கீமின் கருத்தை என்னால் ஏற்க முடியாது : மனோ கணேசன் !

mano

from mano Facebook ….

……தேர்தல்முறை மாற்றம் தொடர்பில் எங்களுக்கு நிறைய முரண்பாடுகள் உள்ளன. அவற்றை பேசி தீர்க்க இடைவிடாமல் முயல்கிறோம். ஆனால், ” மகிந்தவை வீட்டுக்கு அனுப்பிவிட்டு நாம் இன்று பேராபத்தில் விழுந்து விட்டோம்” என்று சொல்லும் நண்பர் ரவுப் ஹக்கீமின் கருத்தை என்னால் ஏற்க முடியாது. மகிந்த இந்நாட்டு தமிழ் பேசும் மக்களை தள்ளிவிட்ட பேராபத்து படுகுழிக்கு நிகரில்லை. இன்று மைத்திரி ஆட்சியில் உருவாகியுள்ள இந்த தேர்தல்முறை முரண்பாட்டை மகிந்தவின் கொலைவெறி ஆட்சியுடன் ஒருபோதும் ஒப்பிட முடியாது…..