மகிந்தவின் பாதுகாப்பு அதிகரிப்பு : சபையில் பிரதமர் !

Ranil1

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு உயரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று வியாழக்கிழமை (25) நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

 தனக்கோ அல்லது ஜனாதிபதிக்கோ இல்லாத அளவு பாதுகாப்பு முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் கூடியளவு பாதுகாப்பு வாகனங்களும் வழங்கப்பட்டுள்ளன என்றும் பிரதமர் இதன்போது தெரிவித்தார்.