’20ஆவது திருத்தத்தை நிறைவேற்றிகொள்வதற்கு முடியாவிடின் அரசாங்கத்தை ஒப்படைக்கவும்’- நிமல் சிறிபாலடி சில்வா

nimal-siripalaபுதிய தேர்தல் முறைமையான 20ஆவது திருத்தத்தை நிறைவேற்றிகொள்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சிக்கு முடியாவிட்டால், அரச அதிகாரங்களை விட்டு விட்டு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிடம் அரசாங்கத்தை ஒப்படைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபாலடி சில்வா கோரியுள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை நிறைவேற்றவிடாது கூட்டணி கட்சிகளுடன் ஐக்கிய தேசியக்கட்சி இணைந்து இரட்டைவேடம் பூண்டுகொண்டு காலால் இழுத்துகொண்டிருக்கின்றது. 

அவற்றை நிறைவேற்றிகொள்வதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முறையான நடவடிக்கைகளை எடுத்துகொண்டிருக்கின்றது என்றும் அவர் கூறினார்.