பந்து தாக்கியதில் முடிவுக்கு வந்தது கீஸ்வெட்டரின் கிரிக்கெட் வாழ்க்கை !

இங்­கி­லாந்து மற்றும் சோமர்செட் அணி­களின் விக்கெட் காப்­பா­ளரும் துடுப்­பாட்ட வீர­ரு­மான கிரேக் கீஸ்­வெட்டர் சக­ல­வி­த­மான கிரிக்கெட் போட்­டி­க­ளி­லி­ருந்தும் ஓய்வு பெற்­றுள்ளார்.

கடந்த ஆண்டு ஜூலையில் நடை­பெற்ற கவுன்டி சம்­பி­யன்ஷிப் போட்­டியில் நொதம்ப்­டன்­ஷையர் அணிக்கு எதி­ராக துடுப்­பெ­டுத்­தா­டிக்­கொண்­டி­ருந்­த­போது கீஸ்­வெட்­டரின் மூக்கில் தாக்­கிய பந்து, கண்­ணுக்கு கீழே உள்ள எலும்­பையும் சேதப்­ப­டுத்­தி­யது.

இந்­நி­லையில் , அவ­ரு­டைய இடது கண்ணில் பார்வைக் கோளாறு ஏற்­பட்­டது. அதன் கார­ண­மாக கீஸ்­வெட்­டரின் அதி­ரடி கிரிக்கெட் வாழ்க்கை முடி­வுக்கு வந்­துள்­ளது.
இது தொடர்­பாக கீஸ்­வெட்டர் கூறு­கையில், “இதற்கு முன்னர் விளை­யா­டி­யதைப் போன்று அதி­ரடி துடுப்­பாட்­டக்­கா­ர­ராக இனிமேல் விளை­யாட வாய்ப்­பில்லை என்­பதை உணர்ந்­து­விட்டேன். என்­னு­டைய கிரிக்கெட் வாழ்க்கை சுவா­ரஷ்­ய­மிக்க ஒரு வாழ்க்­கை­யாக அமைந்­தது.

அதில் ஏரா­ள­மான ஏற்­றங்­க­ளையும், அவ்­வப்­போது இறக்­கங்­க­ளையும் சந்­தித்­தி­ருக்­கிறேன். நான் ஓய்வு பெறு­வ­தற்கு இதுவே சரி­யான தருணம். எந்த வருத்­தமும் இன்றி விடை பெறு­கிறேன்” என குறிப்­பிட்­டுள்ளார்.

கீஸ்­வெட்டர் இங்­கி­லாந்து அணிக்­காக 46 ஒருநாள் போட்­டி­க­ளிலும், 25 டி20 போட்­டி­க­ளிலும் விளை­யா­டி­யுள்ளார். ஆனால் டெஸ்ட் போட்டியில் விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை. இதுதவிர சோமர் செட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரராகவும் இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.