இன்று இரவு ரூபவாஹினியின் அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் NFGG பொதுச் செயலாளர் !

2015-06-08 19.30.33
– ஏ. எல். ஆஸாத் –

ரூபவாஹினியின் “ஜனமண்டலீ” அரசியல் நிகழ்ச்சியில் இன்று இரவு 10 மணிக்கு வடமேல் மாகண முதலமைச்சர் தயாசிரி ஜயசேகர, அரசியலமைப்பு விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் ஆலோசகர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன (ஜனாதிபதி சட்டத்தரனி), நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் (CaFFE) தலமை நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் இவர்களுடன் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) பொதுச் செயலாளர் சகோதரர் நஜா முஹம்மத் அவர்களும் கலந்துரையாடவுள்ளார்கள்.

இதில் சமகால அரசியல், தேர்தல் சீர்த்திருத்தம் மற்றும் 20 ஆம் அரசியலமைப்பு சீர்த்திருத்தம் போன்ற பல விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளன.