மிக மோசமான தோல்வியுடன் உலகக் கிண்ணப் போட்டித் தொடரிலிருந்து வெளியேறியது இலங்கை அணி

மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட்டில் ‘ஏ’ பிரிவில் அங்கம் வகிக்கும் நியூசிலாந்து, இலங்கை அணிகள் பலப்பரிட்சை நடத்தின.

 டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வுசெய்தது. அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கு 162 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அமேலா கெர் 66 ரன்கள் விளாசினார்.

 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. நியூசிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை திணறியது. அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பறிதவித்தது.

 இறுதியில், இலங்கை அணி 15.5 ஓவர்களில் 60 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூசிலாந்து சார்பில் அமேலா கெர், லியா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் நியூசிலாந்து அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன், புள்ளிப்பட்டியலிலும் இரண்டாம் இடத்தை பிடித்தது.

 இந்தத் தோல்வியை அடுத்து இலங்கை அணி உலகக் கிண்ணப் போட்டித் தொடரிலிருந்து வெளியேறியது  .