விளக்கமறியல் நீடிப்பு !

Sajin_Vass_Gunewardane_0நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவின் விளக்கமறியலை எதிர்வரும் 17ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு, கொட்டை நீதவான் நீதிமன்றம் சற்றுமுன்னர் உத்தரவிட்டது.  தனக்கு கடந்த 2011ஆம் ஆண்டில் ஏற்பட்ட சலி பிரச்சினை காரணமாக தான் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை கருத்திற்கொண்டு தனக்கு பிணை வழங்குமாறு, சஜின் வாஸ் எம்.பி.யினால் பிணை மனு கோரிக்கையொன்றும் இன்று நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

இந்த மனுவை கருத்திற்கொண்ட நீதவான், இந்த நோய்க்காக கடந்த 2013ஆம் ஆண்டின் பின்னர் சிகிச்சை பெற்றிருப்பின் அது தொடர்பான வைத்திய அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்ட நீதவான், விளக்கமறியலை நீடித்தார். ஜனாதிபதி செயலகத்திலுள்ள 23 வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.