
கல்விப்புரட்சியில் ஆங்கிலம், விஞ்ஞானத்துக்கு மட்டும் அனுமதியளித்துள்ள தலிபான்கள், மேலைத்தேய கல்வியை முற்றாகத் தடுத்து, இஸ்லாத்துடன் முரண்படும் எந்த சிந்தனைகளையும் அனுமதிக்கவில்லை. இத்தனைக்கும், பெண்களுக்கு என்ன சொல்லப்போகிறது இந்தப் புதிய அரசு? வழமையான இறுக்கம் கடைப்பிடிக்கப்பட்டால், ஆயிரக்கணக்கில் பெண்கள் வெளியேறி அயல்நாடுகளுக்குள் தஞ்சம்புகவும் காத்திருப்பதாக அங்கிருந்து வந்த கடைசித் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே, ஈரானுக்குள் நுழைந்த பல பெண்கள், துருக்கிக்குள் தஞ்சம்புகக் காத்திருப்பதாகவும் தகவல். ஏற்கனவே, பல நாடுகளின் அகதிகளைக் கையாள்வதில் பல சிரமங்களை எதிர்கொண்டுள்ள சர்வதேசத்துக்கு இதுவும் ஒரு தலையிடிதான். உண்மையில், தலிபான்களைப் புறக்கணிக்க முடியாத நெருக்கடிக்குள் சில அயல்நாடுகள் சிக்கத்தான் போகின்றன. வர்த்தகப் போக்குவரத்துக்கு முக்கியமான பாதைகள், தலிபான் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால், இந்த அரசை இந்த அயல்நாடுகள் அங்கீகரித்தே ஆக வேண்டும்.