உயர்தர, புலமைபரிசில் பரீட்சைகள் தொடர்பில் 48 மணி நேரங்களில் இறுதித் தீர்வு

நாளைய தினம் (07) வெளியாகவுள்ள பிசிஆர் பரிசோதனைகளின் முடிவுகளை அடிப்படையாக கொண்டு உயர்தரம் மற்றும் புலமைபரிசில் பரீட்சை தொடர்பான இறுதி தீர்மானத்தை கல்வி அமைச்சு எடுக்கவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

தற்போது இடம்பெற்று வரும் அமைச்சரவை கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் எதிர்வரும் 48 மணித்தியாலங்கள் மிகவும் தீர்மானமிக்கது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.