வெளிநாட்டிலிருந்த மேலும் பல இலங்கையர்கள் நாடு வந்தடைந்தனர்..

வெளிநாட்டில் தங்கியிருந்த இலங்கையர்கள் 345 பேர் இன்று (30) காலை கட்டுநாயக்க மற்றும் மத்தளை விமான நிலையங்களினூடாக நாட்டை வந்தடைந்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரிலிருந்து ஶ்ரீலங்கன் எயார் லைன்ஸ் விமான சேவையின் விசேட விமானத்தின் ஊடாக 293 இலங்கையர்கள், மத்தளை விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர்.

இவர்களைத் தவிர ஐக்கிய அரபு இராச்சியத்தில் பணியாற்றிய 47 இலங்கையர்கள் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இந்தியாவின் மும்பை நகரில் தங்கியிருந்த 5 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக நாட்டிற்கு வந்துள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

விமான நிலையத்திற்கு வருகை தந்த அனைவரும் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன் பின்னர் இவர்களை தனிமைபடுத்தி கண்காணிக்கும் நிலையங்களுக்கு அனுப்புவதற்கு  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.