பிரதமர் மஹிந்த அவர்கள் தான் கருணாவின் பிரதம மெய்ப்பாதுகாவலர் என்கின்றார் சஜித் பிரேமதாச !

கருணாவின் பிரதம மெய்ப்பாதுகாவலர் யார் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச கண்டுபிடித்துள்ளார்.

கருணாவிற்கு பிரதியமைச்சர் பதவியையும் சுதந்திரக்கட்சியின் பிரதித்தலைவர் பதவியையும் வழங்கிய மகிந்த ராஜபக்சவே அவரின் மெய்ப்பாதுகாவலர் எனவும் தெரிவித்துள்ளார்.

கருணாவை தூய்மைப்படுத்தும் பிரதமர் மகிந்த ராஜபக்ச எனது தந்தைக்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றார் என சஜித்பிரேமதாச தெரிவித்துள்ளார்.2005இல் விடுதலைப்புலிகளுக்கு இலஞ்சம் வழங்கிய நபர் பல்வேறு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றார் எனவும் சஜித்பிரேமதாச தெரிவித்துள்ளார்.