தனிமைப்படுத்தல் சட்டம் தொடர்பிலான அரசாங்கத்தின் இரட்டை வேடம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது என்கின்றார் அனுர குமார

தனிமைப்படுத்தல் சட்டத்தினை அரசாங்கம் தனக்கு சாதகமாக பயன்படுத்துகின்றதாக ஜேவிபி குற்றம்சாட்டியுள்ளது.செய்தியாளர் மாநாட்டில் ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் சட்டம் தொடர்பிலான அரசாங்கத்தின் இரட்டை வேடம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.முதலாவது தருணம் முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிநிகழ்வுகள் என தெரிவித்துள்ள ஜேவிபியின் தலைவர் ஆயிரக்கணக்கானவர்கள் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர் என குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வது தடுத்து நிறுத்தப்பட்டதாக கூறிய அவர், செவ்வாய்கிழமை ஆர்ப்பாட்டங்கள் எவ்வாறு ஈவிரக்கமற்ற முறையில் முறியடிக்கப்பட்டன என்பதை அனைவரும் பார்த்ததாகவும் தெரிவித்துள்ளார்.