அட்டாளைச்சேனை இளைஞர்களுக்கும், மக்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்

SM சபீஸ்

உலகிலே மிகமும் வேகமாக மக்களால் வெறுக்கப்பட்ட ஒரு ஆட்சி என்றால் பசுத்தோல் பொருத்திய இந்த நல்லாட்சியாகும்.

அம்பாரை மாவட்ட முஸ்லிம் மக்களை பாடலுக்குள்ளும் தலைப்பாகைக்குள்ளும் அடிமையாக வைத்திருந்த காலம்போய் சுவர்களை உடைத்துக்கொண்டு வெளியே வருவதுபோன்று இன்று முஸ்லிம் காங்கிரசை விட்டு மக்கள் வெளியேறிவருகின்றனர்.

இதனை பறைசாற்றுவதுபோல் இன்று அட்டாளைச்சேனையில் இடம்பெற்ற தேசிய காங்கிரசின் பொதுக்கூட்டத்துக்கு மிகவும் நீண்ட தூரத்துக்கு மக்கள் வெள்ளமாக நிரம்பியிருந்தார்கள் .

இதனைப் பார்த்தல் எந்த அரசியல்வாதிக்குத்தான் பொறாமை வராது?.

நாகரிக வளர்ச்சியில் உச்ச நிலையை எட்டிக்கொண்டிருக்கும் இக்காலப்பகுதியில் அநாகரீகமான செயலில் ஈடுபட்டிருந்த ஒருகும்பலை அட்டாளைச்சேனை இளைஞர்கள் அடித்துவிரசி உரியநேரம் வரை கூட்டத்தை நடாத்திக்கொண்டிருந்தார்கள் அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்ரோம் .

அதேபோன்று வளர்ச்சியில் குன்றியவர்களின் சலசலப்புகளுக்கு பதிலடிகொடுப்பதுபோல், இருந்த இடத்தைவிட்டு நகராமல் தலைவரின் பேச்சை செவிமடுத்துக்கொண்டிருந்த பெரியவர்களின் சகோதரர்களின் செயல்கண்டு நாங்கள் ஆச்சரியமடைந்தோம் அல்ஹம்துலில்லாஹ் ,

வெற்றிபெறப்போகும் ஆட்சியில் இம்மக்களின் அபிலாசைகளை நிறைவு செய்யும் அரசியல் அதிகாரம் அங்கே வழங்கப்படும் என்பது உறுதியாகும் இன்சாஹ் அல்லாஹ்.

என்றுமே இடம்பெற்றிராத அளவிற்கு இப்பொதுக்கூட்டத்தை நடாத்திக்காட்டிய அட்டாளைச்சேனை தே கா ன் தேர்தல் செயற்பாட்டுக்குளுவிற்கு எங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.