சரியான நேரத்தில் எமது முடிவினை வெளிப்படுத்துவோம் – எதிர்க்கட்சித் தலைவர்

சரியான நேரத்தில் எமது முடிவினை வெளிப்படுத்துவோம் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேற்று இரவு பிரதமராக பதவிப் பிரமாணம் செய்திருந்தார்.

இந்த நிலையில் சற்று முன்னர் தமது நிலைப்பாடு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.மேலும் கூறுகையில், இந்த விடயம் தொடர்பில் நாம் எந்தவித முடிவினையும் எடுக்கவில்லை.இது தொடர்பில் ஆராய்ந்து கலந்துரையாடல் மேற்கொண்டு முடிவெடுப்போம். அந்த முடிவினை சரியான நேரத்தில் வெளிப்படுத்துவோம் என தெரிவித்துள்ளார்.