நீதிமன்றில் ஞானசார தேரர் முன்னிலையாகாமைக்காக கைது செய்து முன்னிலைப்படுத்துமாறு நீதிபதி உத்தரவு

FILE IMAGE

பொதுபலசேனாவின் பொதுசெயலாளர் ஞானசார தேரரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

file image

கொழும்பு கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுக்கும் பொலிஸ் பிரிவினால், இனங்களுக்கு இடையில் முறுகலை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாக சமர்ப்பிக்கப்பட்ட வழக்கொன்றில் ஞானசார தேரர் முன்னிலையாகாமைக்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.