34 தொகுதிகள் அடங்கிய விசாரணை அறிக்கை உத்தியோக பூர்வமாக நாளை சபையில் சமர்ப்பிக்கப்படும்..

சாபாநாயகர் கரு ஜெயசூரியவிடத்தில் கையளிக்கப்பட்டுள்ள பிணைமுறிகள் சம்பந்தமான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் பாரிய இலஞ்ச ஊழல் மோசடிகள் தொடர்பான 34 தொகுதிகள் அடங்கிய விசாரணை அறிக்கை ஆகியன நாளையதினம் சபையில் உத்தியோக பூர்வமாக சமர்ப்பிப்பதற்கு கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளது. 

 

எவ்வாறாயினும் குறித்த அறிக்கைகள் மீதான விவாதத்தினை உடனடியாக நடத்துவதற்கு மக்கள் விடுதலை முன்னணி மற்றும் கூட்டு எதிர்க்கட்சியினர் அழுத்தமளித்தபோதும் ஐக்கிய தேசியக் கட்சி அதற்கு கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டமையால் அது குறித்து இணக்கப்பாட்டினை எட்டுவதற்காக மீண்டும் நாளைமறுநாள் புதன்கிழமை கட்சித்தலைவர்கள் கூட்டத்தினை நடத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.