நாங்கள் பதவிக்கு கொண்டு வந்தவர் விதவிதமான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார் : ஹரீன்

ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சிக்கு கொண்டு வந்த ஜனாதிபதி செய்யும் வேலைகளால் தனக்கு அரசியல் கோபம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பதுளையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.எனக்கு தற்போது அரசியல் ரீதியான கோபம் ஏற்பட்டுள்ளது. நாங்கள் பதவிக்கு கொண்டு வந்தவர் விதவிதமான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார். இந்த பேச்சு எனக்கு பிடிக்கவில்லை.

மைத்திரிபால சிறிசேனவை நாங்களே ஜனாதிபதி பதவிக்கு கொண்டு வந்தோம். அடிகளை வாங்கிக்கொண்டு அனைத்து பிரதேசங்களுக்கும் சென்று நாங்களே தேர்தல் பணியாற்றினோம்.

இதனால், பிணை முறிப்பத்திர கதைகளை கூறி, திருடர்களை பிடித்தோம் என்று கூறுகிறார். நாங்கள் ஆட்சிக்கு கொண்டு வந்த ஜனாதிபதியும் நாங்கள் கொண்டு வந்த நல்லாட்சியுமே திருடர்களை பிடித்தது எனவும் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்