பிணைமுறி தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்பிக்கவுள்ள ஜனாதிபதி

ஜனாதிபதியிடம் அண்மையில் கையளிக்கப்பட்ட பிணை முறிப்பத்திர விவாகாரம் தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கை எதிர்வரும் 17 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வகையில் கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.ஜனாதிபதி இந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பின்னர் தேவையானால் எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு பிறகு நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்துவது பற்றி முடிவு எடுக்கலாம் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இதேவேளை, மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பான அறிக்கை தொடர்பில் நாடாளுமன்றில் இன்று நடைபெற்ற விசேட அமர்வில் பெரும் அமளிதுமளி ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.