விராட் கோலிக்காக தற்கொலை செய்து கொண்ட அவரின் தீவிர ரசிகர்

தென்னாப்ரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் கேப்டன் விராட் கோலி 5 ரன்களில் அவுட் ஆனதால் அவரின் 63 வயது ரசிகர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். 

 

மத்தியப் பிரதேச மாநிலம் ரத்லம் அம்பேத்கர் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் பாபுலால் பாரியா இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன், விராட் கோலியின் தீவிர ரசிகர். தற்போது,  தென்னாப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது.

இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் விராட் கோலி 5 ரன்களில் அவுட் ஆனார். இந்திய அணி இறுதியில் தோல்வியும் கண்டது. போட்டி நிறைவடைந்ததிலிருந்து சோகமாக இருந்த பாபுலால் மாரியா நேற்று தீக்குளித்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.