மீண்டும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைத்து குற்றவாளிகளையும் தண்டிக்க தயங்க மாட்டோம்: பசில் ராஜபக்ச

நல்லாட்சி என்ற பெயரில் நாட்டினை நாசமாக்கியதில் ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் எவ்வாறு பொறுப்புக் கூட வேண்டுமோ அதேபோல் தமிழ் தேசியக் கூட்டமைப்பும், மக்கள் விடுதலை முன்னணியும் பொறுப்புக்கூறியாக வேண்டும். மறைமுகமாக அரசாங்கத்தை ஆதரித்து நாட்டினை நாசமாகியுள்ளனர் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின்  உறுப்பினர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார். மீண்டும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைத்து குற்றவாளிகளையும் தண்டிக்கவும் தயங்க மாட்டோம் எனவும் அவர் குறிப்பிட்டார். 

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேர்தல் பிரசார கூட்டங்கள் நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில்  நீர்கொழும்பு பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.