1980ஆம் ஆண்டில் சிறிமாவோ பண்டாரநாயக்கவிற்கு செய்த சூழ்ச்சியை மகிந்த மீண்டும் செய்ய முடியாது : முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா


சுதந்திரக் கட்சியை பிளவுப்படுத்தி சிறிமாவோ பண்டாரநாயக்கவிற்கு எதிராக 1980ஆம் ஆண்டில் செய்த சூழ்ச்சியை மகிந்த ராஜபக்ச மீண்டும் செய்ய முடியாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான சுதந்திரக் கட்சியின் கம்பஹா மாவட்டத்திற்காக வேட்புமனுத் தாக்கல் செய்யப்படும் நடவடிக்கை இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்டது.

வேட்புமனுத்தாக்கலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கட்சியின் சட்டத்திட்டங்களுக்கு எதிராக செயற்படுபவர்களுக்கான நடவடிக்கைகள் குறித்து பின்னர் அறிவிப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.