2025 ஆம் ஆண்டு நாட்டில் தொற்றா நோய்களால் இறப்பவர்களின் எண்ணிகை 25 சதவீதமாக குறையும் : சுகாதாரத்துறை அமைச்சர்

2025 ஆம் ஆண்டு நாட்டில் தொற்றா நோய்களால் இறப்பவர்களின் எண்ணிகையை 25 சதவீதமாக குறைப்பதற்கு எதிர்பார்த்துள்ள சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித் சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் இதன்பொருட்டு எடுத்துள்ள நடவடிக்கைகள் காரணமாக தற்போது புகைத்தல் 15 சதவீதமாக குறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.