அரசியலுக்குல் பிரவேசிக்கின்றாரா யோசித்த ராஜபக்சே ?

மஹிந்த ராஜபக்ஸவின் குடும்பத்தில் யோசித்த ராஜபக்ஸ, ரோஹித்த ராஜபக்ஸ, ஷிரந்தி ராஜபக்ஸவை தவிர அனைவருமே அரசியலில் ஈடுபட்டுள்ளார்கள்.

ஆனால் தற்போது யோசித்த ராஜபக்ஸவும் அரசியலில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி இத்தாலியில் மக்கள் சந்திப்பு ஒன்றை நடாத்த உள்ளது.இந்த சந்திப்பு, இத்தாலியில் இருக்கும் இலங்கையர்களுடன் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (22ஆம் திகதி) நடைபெறவுள்ளதாக சில துண்டுப்பிரசுரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

அருந்திக பெர்னாண்டோ, தினேஸ் பெரேரா மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் மகன் யோசித்த ராஜபக்ஸவும் குறித்த மக்கள் சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளதாக துண்டுப்பிரசுரத்தில் காட்சிப்பட்டுத்தப்பட்டுள்ளது.

இந்த துண்டுப்பிரசுரத்தில் யோசித்த ராஜபக்ஸவின் பெயரும், புகைப்படமும் குறிப்பிடப்பட்டுள்ளதால் இவரும் அரசியலில் குதித்து விட்டாரா? என்று கேள்வி எழுந்துள்ளது.