SLFP யின் கல்முனை அமைப்பாளராக இஸட்.ஏ.எச்.றஹ்மான் ஜனாதிபதியால் நியமனம்

(பி.எம்.எம்.ஏ.காதர்)

 கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் இஸட்.ஏ.எச்.றஹ்மான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கல்முனை பிராந்திய அமைப்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்.

 இவருக்கான நியமனக்கடிதம் இன்று(12-10-2017)ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் வழங்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு நாடு முழுவதும் இன்று அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.