ரவிக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணை ஆளும் கட்சியின் ஆதரவுடன் வெற்றி பெறமுடியும் : கம்மன்பில

அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையில் ஆளும் கட்சியின் ஆதரவுடன் வெற்றி பெறமுடியும் என ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

பிவிதுரு ஹெல உறுமயவின் செயலாளர் உதய கம்மன்பில இதனை தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்துக்கு எதிரான மூன்றாவது நம்பிக்கையில்லா பிரேரணை என்ற வகையில், இதில் வெற்றி பெறமுடியும் என்ற நம்பிக்கை உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் ஐக்கிய தேசியக்கட்சியும் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் கலந்தாலோசனைகளை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.