ஆளுநருடன் ஹசன் அலி, பஷீர் சந்திப்பு

 கிழக்கு மாகாண ஆளுநர் கெளரவ. ரோஹித்த போகொல்லாகம உடனான ஒரு சினேகித பூர்வமான சந்திப்பில் முஸ்லிம் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர்கள் அவரது அலுவலகத்தில் இன்று காலை ஈடுபட்டனர். கலைக்கப்படும் கிழக்கு மாகாணத்தின் நிருவாக நடவெடிக்கைகள் மற்றும் மாகாண தேர்தல் சம்மந்தமாகவும் பலவிடயங்கள் இச்சந்திப்பின் போது பேசப்பட்டது. தாராளவாத கொள்கையுடைய தற்போதைய ஆளுநரின் சேவையில் சிறுபான்மை மக்களுக்கு ஒரு நிரந்தர தீர்வை பெறக்கூடிய சாத்தியக்கூறுகள் தென்படுவதாகவும் தங்கள் வாழ்த்தையும் அமைப்பினர் அவருடனான உரையாடலில் பின் தெரிவித்தனர். இச் சந்திப்பின் போது அமைப்பின் சார்பில் ஹசன் அலி, பசீர் சேகு தாவூத், நாசர் ஹாஜியார் ஆகியோர் கலந்து கொண்டனர்.