ஜனாதிபதி; ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் என்பது சிலருக்கு மறந்து விட்டது: துமிந்த திஸாநாயக்க

நல்லாட்சி அரசாங்கம் இன்று கவிழும் நாளை கவிழும் என்று கூறி கூட்டு எதிர்க்கட்சி மற்றும் அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் கருத்துக்களை வெளியிட்டு கனவு கண்டாலும் அரசாங்கத்தை கவிழ்க்க இடமளிக்க போவதில்லை என ஜனாதிபதி தெளிவாக கூறியிருப்பதாக அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதி வரை தன்னுடன் அரசாங்கத்தில் இருக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரிடம் கூறவில்லை.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் என்பது சிலருக்கு மறந்து விட்டது.

அரசாங்கத்தின் அடுத்தக் கட்ட வேலைத்திட்டம் குறித்து ஐக்கிய தேசியக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகம் அந்த கட்சியுடன் புதிய உடன்படிக்கை டிசம்பர் மாதத்திற்கு பின்னர் கைச்சாத்திடப்படும் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருமான துமிந்த திஸாநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.