இலங்கை அணித்தலைவர் மெத்தியூஸ் ஏன் தலைமைப் பதவியை இராஜினாமாச் செய்தார் ?

சிம்பாப்வே அணிக்கெதிராக சொந்த மண்ணில் அடைந்த அதிர்ச்சித் தோல்வியை அடுத்து தனது தலைமைப் பதவியினை அஞ்சலோ மெத்தியூஸ் இராஜினாமச் செய்துள்ளார் , இவர் நேற்று காலை தேர்வுக்கு குழுத்தலைவர் சனத் ஜெயசூரியவை சந்தித்து தனது இராஜினாமா தொடர்பில் தனது முடிவினை தெரிவித்துள்ளார் .

சொந்த மண்ணில் சிம்பாப்வே அணியுடனான ஒருநாள் போட்டித் தொடரினை தோல்வியடைந்த பின்னரே குறித்த முடிவினை மெத்தியூஸ் எடுத்துள்ளமை குறிப்பிடதக்கது.

மெத்தியூஸ் தலைமையில் இலங்கை அணி 34 டெஸ்ட் போட்டிகளில் பங்கு பற்றி 13 வெற்றிகளையும் 15 தோல்விகளையும் , ஒருநாள் போட்டிகளில் 47 வெற்றிகளையும் 46 தோல்விகளையும் , T20 போட்டிகளில் 4 வெற்றிகளையும் 7 தோல்விகளையும் இலங்கை அணி இவரின் தலைமையின் கீழ் பெற்றுள்ளது .

இலங்கை அணியின் அடுத்த புதிய தலைவர் யார் என்பது தொடர்பில் எவ்விதமான தகவல்களும் வெளியாகவில்லை.