கொழும்புக்கும், வாரணாசிக்கும் இடையில் விமான சேவை: இந்திய பிரதமர் அறிவிப்பு

கொழும்புக்கும், இந்தியாவின் வாரணாசிக்கும் இடையில் விமான சேவை ஆரம்பிக்கப்படும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

எயர் இந்தியா விமான சேவை மூலம் இந்த விமான போக்குவரத்து எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது.

மேலும், எயர் இந்தியா விமான சேவை ஏற்கனவே கொழும்பில் இருந்து இந்தியாவின் சென்னை, டெல்லி உள்ளிட்ட நகரங்களுக்கு தனது சேவைகளை நடத்தி வருகிறது.