காணாமல் போனோர் குறித்த விடயத்திற்கு அரசாங்கம் உரிய பதில் வழங்காதிருப்பதாக முதல்வர் தெரிவிப்பு

காணாமல் போனோர் குறித்த விடயத்திற்கு அரசாங்கம் உரிய பதில் வழங்காதிருப்பதாக வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் 41 நாட்களாக போராட்டத்தை நடத்தி வருகின்ற காணாமல் போனோரை சந்தித்த போது அவர் இந்த விடயத்தைக் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்…

அரசாங்கத்துக்கு பாதகத்தை ஏற்படுத்தும் என்ற நிலையிலேயே காணாமல் போனோர் குறித்த விடயத்துக்கு அரசாங்கம் பதில் கூறாதிருக்கின்றது.

கொலை செய்து விட்டோம் என்றோ அல்லது இந்த இடத்தில் தடுத்து வைத்திருக்கிறோம் என்றோ, அரசாங்கம் பதில் கூறினால், அது அரசாங்கத்துக்கோ சிக்கலை ஏற்படுத்தும். இதனாலேயே அரசாங்கம் இந்த விடயத்தில் மௌனமாக இருக்கிறது.

எவ்வாறாயினும் இந்த விடயத்தில் உரிய அழுத்தங்களை பிரயோகித்து நடவடிக்கை எடுத்து வருகின்றோம் என வடக்கு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.