வஸீமின் கொலை­யா­ளி­களை உடன் கைது செய்­யுங்கள்: அனுர சேன­நா­யக்க நீதவா­னிடம் மன்றாட்டம்

வஸீம் தாஜுதீன் படு கொலை தொடர்பில் கொலை­யா­ளி­களை அவ­ச­ர­மாக கைது  செய்­யு­மாறும், கொலை­யுடன் தொடர்பு அற்ற தன்னை பிணையில் விடு­விக்­கு­மாறும் முன்னாள் மேல் மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேன­நா­யக்க நேற்று பிர­தி­வாதிக் கூண்டில் இருந்­த­வாறு நீதி­வா­னிடம் மன்­றா­டினார். 

குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் இக்­கொலை விசா­ர­ணை­களைப் பொறுப்­பேற்று இரு வரு­டங்­களும் ஒரு மாதமும் கடந்­துள்ள நிலையில் தன்னை இக்­கொ­லை­யுடன் தொடர்­பு­டைய சாட்­சி­களை மறைத்­த­தாகக் கூறி கைது செய்து ஒரு வரு­டமும் 3 மாதங்­களுமாகின்­றன. என் மீதான குற்றச்சாட்­டு­­க­ளுக்கேனும் இது­வரை சாட்­சி­களை அவர்கள் மன்றில் சமர்­பிக்க வில்லை.

இது­வரை சமர்­ப்பிக்­கப்பட்ட அத்­தனை பீ அறிக்­கை­களின் பிர­கா­ரமும் என்னை தொடர்ந்து விளக்­க­ம­ரி­யலில் வைப்­ப­தற்­கான எந்த ஆதா­ரமும் இல்லை என்­பதை நான் அறி­வேன்.

கொலைச் சதி தொடர்பில் சந்­தேகம் சந்­தேகம் எனக் கூறியே என்னை விளக்­க­ம­றி­யலில் வைத்­துள்­ளனர்.

எனக்கு பிணை அளிக்க இந்த நீதி­மன்­றுக்கு அதி­காரம் உள்­ளது.

நான் கொலை செய்­ய­வில்லை. எனவேதான் வஸீமின் கொலை­யா­ளி­களை உடன் கைது செய்­யுங்கள் என இந்த மன்றைக் கோரு­கின்றேன். வஸீமைக் கொலை செய்­த­வர்­களைக் கைது செய்­யுங்கள் என வலி­யு­றுத்தி அனுர சேன­நா­யக்க நீதி­வா­னிடம் மன்­றா­டினார்.

நேற்­றைய வஸீம் தாஜுதீன் கொலை வழக்கின் போதே அவர் இவ்வாறு மன்றாடினார். எனினும் நேற்றும் பிணை வழங்காத நீதிவான் விளக்கமறியலை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நீடித்தார்.