கற்பாறைகள் சரிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் பலி

க.கிஷாந்தன்

நுவரெலியா – வலப்பனை பிரதேசத்திற்குட்பட்ட தெரிபேஹ பகுதியில் கற்பாறைகள் சரிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த இருவர் பரிதாபமான நிலையில் உயிரிழந்துள்ளதாக வலப்பனை பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

07.03.2017 அன்று மாலை தந்தையும், மகனும் செங்குத்தாக காணப்பட்ட உயரமான மலைப்பகுதியில் விவசாய நடவடிக்கை மேற்கொள்வதற்காக துப்பரவு செய்து கொண்டியிருந்த போது மேலிருந்து பாரிய கற்பாறை சரிந்து விழுந்துள்ளது.

இதன் போது இருவரும் கற்பறையில் சிக்கி பரிதாபமான நிலையில் உயிரிழந்துள்ளனர்.  இவ்வாறு உயிரிழந்தவர்கள் 70 வயதுடைய டி.எம்.எச் சுதுபண்டார  மற்றும்  36 வயதுடைய நிமால் திலகசிரி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலம் வைத்தியசாலைக்கு கொண்டுச்செல்லப்பட்டுள்ளதாகவும், பிரேத பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை வலப்பனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.