இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டுமென பிரித்தானிய நிழல் வெளிவிவகார செயலாளர் கோரிக்கை

இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகிக்குமாறு பிரித்தானிய நிழல் வெளிவிவகார செயலாளர் எமிலி தோன்பெரி (Emily Thornberry ) கோரியுள்ளார்.ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை மீது பிரித்தானியா அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டுமென அவர் கோரியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் முழு அளவில் அமுல்படுத்தப்பட வேண்டுமென தெரிவித்துள்ள அவர் அது தொடர்பில் இலங்கை மீது பிரித்தானியா அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை மீது பிரயோகிக்கப்பட்டுள்ள வர்த்தகத் தடைகள் எதுவும் நீக்கப்படக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.