இடை நிறுத்தப்பட்டுள்ள பஷீரிடம் லங்கா ப்ரொண்ட் நியூஸ் தொடர்பு கொண்டு வினவிய போது…

 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பதவியிலிருந்து பஷீர் ஷேகு தாவூத் உடனடியாக இடை நிறுத்தப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக lanka front news அவரிடம் தொடர்பு கொண்டு வினவிய போது,
‘தான் இன்று அதி உயர் பீட கூட்டத்தில் கலந்து கொள்ளாத நிலையில், தன்னை தவிசாளர் பதவியிலிருந்து இடை நிறுத்தியுள்ளதாக அறியக்கிடைத்ததாகவும், அடுத்த கட்ட நடவடிக்கைகளை தான்  மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் எம்மிடம் தெரிவித்தார்’.

இவ்வாறே பஷீர் சேகு தாவூத் பதவி நீக்கப்படலாம் என பல அரச ஆய்வாளர்களின் வியூகமும் காணப்பட்டது. ஏனெனில் கடந்த சில நாட்களாக அவரின் முகநூலின் பதிவுகள் அவ்வாறே அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் தகவல்களை அறிய lanka front news உடன் இணைந்திருங்கள்..