ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை இன்று..

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் புரிந்துணர்வை கட்டியெழுப்புவதற்காக விசேட பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த பேச்சுவார்த்தைகளின் முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை இன்று நடைபெறவுள்ளது.

இரண்டு கட்சிகளை சேர்ந்த பொதுச் செயலாளர்கள் தலைமையிலான அணிகள் பேச்சுவார்த்தைக்காக நியமிக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை இவர்கள் சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளனர்.

அமைச்சர்களாக செயற்படும் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் இரண்டு கட்சிகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகள் தொடர்பில் இந்த பேச்சுவார்த்தைகளில் கவனம் செலுத்தப்பட உள்ளது.