மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் ஜனாதிபதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: சுசில்

நாட்டிற்கு மிகவும் திறமையான பொதுக்கட்டமைப்புடன் கூடிய ஒரு நிர்வாகம் அவசியம் என சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.

கடுவலையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் ஜனாதிபதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி சிறந்ததொரு தீர்வை முன்னெடுப்பார் எனவும் எதிர்பார்க்கின்றேன். 

மேலும் பிணை முறி மோசடியின் பின்னணியில் காணப்படும் சட்டத்திற்கு புறம்பானவர்களும் மற்றும் அரசியல் கட்சிகள் எதுவாக இருப்பினும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்