மைத்திரிபால சிறிசேன என்பவர் தனது கட்சியை தானே தோற்கடித்த அற்புதமான தலைவர்:அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியல் வரலாற்றில் இடம்பெறுவார் என முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நுகேகொடையில் இன்று நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சி ஒழுங்கு செய்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் மைத்திரிபால சிறிசேன என்பவர் தனது கட்சியை தானே தோற்கடித்த அற்புதமான தலைவர்.

இதன் காரணமாக அனைவரும் இணைந்து மகிந்த ராஜபக்ச யுகத்தை மீண்டும் ஏற்படுத்த வேண்டியது காலத்தின் தேவை.

தம்முடன் இணைந்து கொள்ளுமாறு சிலர் விடுக்கும் அழைப்புகளை எதிர்க்கட்சி ஏற்றுக்கொள்ளாது எனவும் ஜீ.எல்.பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.