இன்று நள்ளிரவு முதல் மண்ணெண்ணெயின் விலையில் மாற்றம் !

இன்று நள்ளிரவு முதல் மண்ணெண்ணெயின் விலை குறைக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கிணங்க, ஒரு லீற்றர் மண்ணெண்ணெயின் விலை 5 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் படி ஒரு லீற்றர் மண்ணெண்ணையின் புதியவிலை 44 ரூபாவாக குறைக்கப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது.

2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுக்கு அமையவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.