பிலிப்பைன்ஸ் நாட்டில் நடுக்கடலில் 8 பேரை சுட்டுக்கொன்று கொள்ளையர்கள் அட்டூழியம்

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கில் உள்ள கடல் பகுதியில் 15 மீனவர்கள் கொண்ட குழுவினர் நேற்றிரவு லாவுட் சிரோமோன் தீவு அருகே தங்களது படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அப்பகுதி வழியாக ஒரு படகில் வந்த கொள்ளையர்கள், மீனவர்களின் படகை குறி வைத்து இயந்திரத் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். இந்த திடீர் தாக்குதலால் அதிர்ச்சியடைந்த மீனவர்கள் செய்வதறியாது திகைத்தனர். சில மீனவர்கள் படகிலிருந்து கடலில் குதித்து அருகிலுள்ள தீவை நோக்கி நீந்திச் செல்ல ஆரம்பித்தனர்.
கொள்ளையர்களின் இந்த கொடூர தாக்குதலால் படகிலிருந்த 8 மீனவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்தவுடன் கடலோரக் காவல் படை படகுககள் சம்பவ விரைந்து சென்றதாகவும், கொள்ளையர்களை தேடி வருவதாகவும் அப்பகுதி கடலோரக் காவல் படை செய்தி தொடர்பாளர் அர்மந் பாலிலோ தெரிவித்துள்ளார்.