மஹிந்த நாட்டின் தலைவராக இருந்திருந்தால் டிலான் பெரேரா இவ்வாறு பேச முடியுமா?-முஜிபுர் ரஹ்மான்

நாமல் ராஜபக்ஸவை சேர் என அழைத்தவர்கள் இன்று வீரர்கள் போல பேசிக்கொண்டிருக்கின்றனர் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் இருப்பதானால், அதை விமர்சிக்காது, அதனுடன் இணைந்து பயணிக்க வேண்டும். அரசாங்கத்தில் இருக்க முடியாவிட்டால் அவர்கள் வெளியேறலாம்.

இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா மயக்கம் வந்தவர் போல இப்போது பேசுகின்றார். மஹிந்த ராஜபக்ஸ காலத்தில் இவர்கள் பூனைக் குட்டிகளைப்போல இருந்தனர். ஒரு வார்த்தைகூட பேசவில்லை.

நாமல் ராஜபக்ஸவைக்கூட சேர் என்று கூப்பிட்டுக்கொண்டிருந்தனர். அன்று அப்படி இருந்தவர்கள்தான் இன்று வீரர்கள்போல பேசுகின்றனர்.

மஹிந்த ராஜபக்ஸ நாட்டின் தலைவராக இருந்தால் டிலான் பெரேராவுக்கு இவ்வாறு பேச முடியுமா என்று முஜிபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பியுள்ளார்.