தமிழகமே சோகத்தில்.. அம்மா அமரரானார் !!

55795474-cmsசென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த, 74 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா இன்று மாலை,5:25 மணிக்கு காலமானார்.

முதல்வர் ஜெயலலிதா மூச்சு திணறல் பாதிப்பு ஏற்பட்டு, செப்., 22ம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சில நாட்கள் முன் வரை அவரது உடல் நிலையில் முன்னேற்றம் இருந்து வந்தது என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டு வந்தது. லண்டன் டாக்டர் ரிச்சர்டு பீலே, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

நேற்று மாலை, 6 மணிக்கு திடீரென அவருக்கு, ‛கார்டியாக் அரெஸ்ட்’ ஏற்பட்டது. இதையடுத்து, தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு, ‛எக்கோ’ கருவி உள்ளிட் உயர் காக்கும் கருவிகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இன்று பிற்பகல், அவர் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. லண்டன் டாக்டர் ரிச்சர்டு பீலேவும் இதை உறுதிப்படுத்தினார்.இந்த சூழ்நிலையி்ல், இன்று மாலை, 5.25 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா உயிர் பிரிந்தது.

தினமலர்