தடுத்து நிறுத்தப்பட்ட ஞானசார பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் (photo)

04

பொது பல சேனா உட்பட பல அமைப்புகள் இணைந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த பேரணி இன்று (சனிக்கிழமை) மட்டக்களப்பு பொலநறுவை எல்லை பிரதேசமான ரிதிதென்ன பகுதியில் பொலிஸாரால் இடை நிறுத்தப்பட்டதையடுத்து அங்கு பதற்ற நிலை தோன்றியுள்ளது.

 

தாம் பூஜையொன்றுக்காகவே அங்கு செல்வதாக பொலிசாருடன் ஞானசார வாதத்தில் ஈடுபட்ட போதிலும் நீதி மன்றத்தின் உத்தரவுக்கமைய தம்மால் அனுமதிக்க முடியாது என பொலிசார் பதிலளித்துள்ளனர்.
இந்நிலையில் வீதியை மறித்து வாகனத்தை நிறுத்தி வீதியில் அமர்ந்து பொராட்டம் செய்ததால் அங்கு சென்ற வாகனங்கள் இரு பக்கமும் வீதிகளில் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் வாகன நெரிசல் மற்றும் போக்குவரத்துத் தடை ஏற்பட்டுள்ளது.

02
இந்த சம்ப இடத்திற்கு செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை செய்தி எடுக்க வேண்டாம் என்றும் மீறி படம் எடுத்தால் கெமரா உடைக்கப்படும் என்று பொது பலசேனா அமைப்படன் வந்த இளைஞர்கள் தெரிவித்தனர்.

07
ஏற்கனவே இவர்களின் மட்டக்களப்பு விஜயத்துக்கு நீதிமன்ற தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வெறுப்புணர்வைத் தூண்டும் சட்ட ரீதியற்ற ஒன்று கூடலைத் தடுக்கும் தடை உத்தரவொன்றை ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை (02.12.2016) பிறப்பித்துள்ளது.

 
இந்த உத்தரவையும் மீறி வெறுப்புணர்வைத் தூண்டும் சட்ட ரீதியற்ற ஒன்று கூடல் நிகழுமாயின் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பிலுள்ள மங்களராம விஹாரைக்கு விஜயம் செய்யும் பொதுபல சேனா அமைப்பின் ஞானசார தேரர் தலைமையிலான குழுவினர் ஏறாவூர் நகரம்இ புன்னைக்குடா மற்றும் ஏறாவூர்ப்பற்றுப் பிரதேசத்தை அண்டிய பதுளை வீதியில் அரச மரம் உள்ள தனியார் காணியொன்றுக்குள் செல்வதாகவும் நிகழ்ச்சி நிரல் இடப்பட்டுள்ளது.

 
இதனைக் கருத்திற் கொண்டு பிரதேசத்தில் ஆர்ப்பாட்டங்களும் இனவெறுப்புணர்வுகளைத் தூண்டும் சம்பவங்களும் இடம்பெறலாம் என்பதால் கரடியனாறு பொலிஸார் அமைதிக்குப் பங்கம் ஏற்படுத்தி வெறுப்புணர்வைத் தூண்டும் ஒன்று கூடலுக்குத் தடை விதிக்குமாறு நீதி மன்றத்தை வேண்டியிருந்தனர்.
மனுவை ஆராய்ந்த மாவட்ட பதில் நீதிபதி ஆதம்லெப்பை முஹம்மத் முனாஸ் வெறுப்புணர்வைத் தூண்டும் சட்ட ரீதியற்ற ஒன்று கூடலைத் தடுக்கும் தடை உத்தரவைத் பிறப்பித்தார்.