கடந்த அர­சாங்கம் செய்­த­தையே இந்த அர­சாங்­கமும் செய்­கி­றது: ரஸ்மின்

sltj_logoபெளத்த மக்­களை கோபப்­ப­டுத்தும் வித­மாக கருத்­துக்­களை வெளிப்­ப­டுத்தி சிங்­கள –- முஸ்லிம் சமூ­கங்­க­ளி­டையே  மோதலை ஏற்­ப­டுத்த முயன்றார் எனும் குற்­றச்­சாட்டின் கீழ் ஸ்ரீலங்கா தெளஹீத் ஜமா­அத்தின் செய­லாளர் அப்துர் ராஸிக் மாளி­கா­வத்தை பொலி­ஸா­ரினால் நேற்று கைது செய்­யப்­பட்டார்.

பொது­ப­ல­சேனா அமைப்பின் நிறை­வேற்றுப் பணிப்­பாளர் டிலந்த விதா­னகே மாளி­கா­வத்தை பொலிஸ் நிலை­யத்தில் செய்த முறைப்­பாட்­டுக்கு அமை­வா­கவே நேற்று அவர் கைது செய்­யப்­பட்டார்.

கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் நெவில் டி சில்­வாவின் சிறப்பு ஆலோ­ச­னை­க­ளுக்கு அமை­வாக நேற்றுக் காலை மாளி­கா­வத்தை பொலிஸ் நிலை­யத்­திற்கு அழைக்­கப்­பட்ட அப்துர் ராஸிக்­கிடம் அங்கு நீண்ட விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.

jamath1

இத­னை­ய­டுத்து சிங்­கள –- முஸ்லிம் சமூ­கங்­க­ளி­டையே மோதலைத் தூண்டும் வண்­ணமும் பெளத்த பக்­தர்கள் ஒரு தொகு­தி­யி­னரின்  மதிப்­புக்­கு­ரிய மத­கு­ரு­மார்­களை இழி­வாகப் பேசியும்  கருத்­துக்­களை வெளி­யிட்டார் எனும் குற்­றச்­சாட்டின் கீழ் அவர் கைது செய்­யப்­பட்டார்.

கைது செய்­யப்­பட்ட அப்துர் ராஸிக் நேற்று பிற்­பகல் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் ஊடாக கொழும்பு மேல­திக நீதிவான் சந்­தன கலங்­சூ­ரிய முன்­னி­லையில் ஆஜர் செய்­யப்­பட்டார்.

இதன்­போது சிறப்பு விசா­ரணை அறிக்­கையை மன்றில் வழங்­கிய பொலிஸார், கடந்த 3 ஆம் திகதி மாளி­கா­வத்­தையில் தெளஹீத் ஜமாஅத் அமைப்பு முன்­னெ­டுத்த ஆர்ப்­பாட்­டத்தின் போது சந்­தேக நபரால் வெறுக்­கத்­தக்க பேச்­சுக்கள் பகி­ரங்­க­மாக பேசப்­பட்­டுள்­ள­தாக சுட்­டிக்­காட்­டினர். இத­னை­ய­டுத்து முன்­வைக்­கப்­பட்ட விட­யங்­களை ஆராய்ந்த நீதிவான் சந்­தன கலங்­சூ­ரிய சந்­தேக நபரை எதிர்­வரும் 29 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க உத்­த­ர­விட்டார்.

சந்­தேக நபர் சார்பில் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி சிராஸ் நூர்தீன் மற்றும் மைத்­திரி குண­ரத்ன உள்­ளிட்ட சட்­டத்­த­ர­ணிகள் ஆஜராகியிருந்தனர்.

பொலிஸார் சார்பில் பிரதான பொலிஸ் பரிசோதகர் நெவில் டி சில்வாவும் மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் நாமசிறிரத்னவும் ஆஜராகினர். 

இதே­வேளை, ஸ்ரீ லங்கா தெளஹீத் ஜமா­அத்தின் செய­லாளர் பிணை நிபந்­த­னை­களை மீற­வில்லை. பௌத்த மதத்தை இழி­வாகப் பேச­வில்லை. ஞான­சார தேரர் என்ற தனி­ந­ப­ருக்கு எதி­ரா­கவே பேசினார்.

எனவே பிணை நிபந்­தனையை மீறினார் என கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் அவர் வைக்­கப்­பட்­டது அநீ­தி­யாகும்.

இதனை சட்­ட­ரீ­தி­யாக எதிர்­கொள்வோம் என ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமா­அத்தின் துணைச்­செ­ய­லாளர் எம்.எஸ்.எம்.ரஸ்மின் தெரி­வித்தார்.

10509744_722605591150485_4292501593076134340_n_fotor

செய­லா­ள­ருக்கு வழங்­கப்­பட்ட பிணை நிபந்­தனை அடுத்த மதங்­களை இழி­வாகப் பேசக்­கூ­டாது என்றே தெரி­விக்­கி­றதே ஒழிய தனி மனி­த­னுக்கு எதி­ராக பேசக்­கூ­டாது என்று தெரி­விக்­க­வில்லை. 

ஜி.எஸ்.பி. சலு­கைக்­காக முஸ்லிம் தனியார் சட்­டத்தில் திருத்­தங்­களைச் செய்­யக்­கூ­டாது என்றே நாம் ஆர்ப்­பாட்டம் நடத்­தினோம். இது எமது உரி­மைக்­கான ஆர்ப்­பாட்­ட­மாகும். இந்த ஆர்ப்­பாட்­டத்தைச் செய்தால் நாம் அவர்­களை அடிப்போம், விரட்­டுவோம், கொல்­லுவோம் என சவால் விட்­டது பொது­ப­ல­சேனா அமைப்­பே­யாகும்.

சமூ­கத்­துக்கோ, சம­யத்­துக்கோ எதி­ராக எவரும் பிர­சாரம் செய்தால் அதை எதிர்ப்­ப­தற்கு சட்­ட­ரீ­தி­யான நட­வ­டிக்­கைளை முன்­னெ­டுப்­ப­தற்கே ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் செயற்­ப­டு­கி­றது. ஒருவர் உரி­மையில் இன்­னொ­ருவர் தலை­யிட முடி­யாது.

பொது­ப­ல­சே­னாவின் செய­லாளர் ஞான­சார தேரரும் பிணை நிபந்­த­னை­களின் கீழே விடு­விக்­கப்­பட்­டுள்ளார்.

அவர் குர்­ஆ­னையும் முஹம்­மது நபி­யையும் அவ­ம­தித்துப் பேசினார்.

வெறுப்­பு­ணர்வு பேச்சு பேசக்­கூ­டாது எனும் பிணை நிபந்­த­னை­களின் கீழே அவர் விடு­விக்­கப்­பட்டார். நீதி­மன்­றி­லி­ருந்து வெளி­யே­றிய அவர் வெளியே வந்து மீண்டும் குர்­ஆனை அவ­ம­தித்துப் பேசினார். அது தொடர்­பாக அவ­ருக்கு எதி­ராக மீண்டும் முறைப்­பாடு செய்­யப்­பட்­டது.

ஆனால் அவர் கைது செய்­யப்­ப­ட­வில்லை. கடந்த அர­சாங்கம் செய்­த­தையே இந்த அர­சாங்­கமும் செய்­கி­றது என்றார்.